விடைத்தாள் தவறி விழுந்த விவகாரம்: ரெயில்வே துறை மீது தமிழக அரசு வழக்கு!

qp
கடந்த 28.03.2013 வியாழக்கிழமை 10-ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்குரிய விடைத் தாள்கள் விருத்தாசலத்தில் இருந்து பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது விடைத்தாள்கள் தவறி கீழே விழுந்து சேதம் அடைந்தது. இதனால் ஒரே மையத்தை சேர்ந்த 170-க்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் சேதம் அடைந்ததால் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

Vaigai chelvanபாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவதில்லை என்றும், மாணவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார். மேலும் விடைத்தாள்கள் தவறவிட்ட ரெயில்வே துறை மீது தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்படும். விடைத்தாள்களில் அச்சு பிழைகள் அதிகம் இருப்பதாக வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.

 

Leave a Reply