கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்!

fisher mansதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், நேற்று கடலுக்குள் மீன்பிடிக்க 20 படகுகளில் சென்ற ராமேசுவரம் மீனவர்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர்.

மீனவர்களை கயிறு மற்றும் பிளாஸ்டிக் குழாய்களை கொண்டு தாக்கியுள்ளனர். மேலும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் மீன்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.

இன்ஜின் இயங்காமல் இருப்பதற்காக அதனுள் சர்க்கரை கொட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் மீனவர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர். கரைக்கு திரும்பிய அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply