ரூ.6.75 கோடி மோசடி புகார் : மாடர்ன் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன உரிமையாளர் கைது!

moderncomputers1

உரிமையாளர் கோபிநாத்

உரிமையாளர் கோபிநாத்

உரிமையாளர் கோபிநாத்

உரிமையாளர் கோபிநாத்

சென்னையில் பல்வேறு இடங்களில் மாடர்ன் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சி.சி.எஸ். இன்போடெக் நிறுவனம் மொத்தமாக கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்-களை சப்ளை செய்துள்ளது.

இந்நிலையில், சி.சி.எஸ். நிறுவனம் சார்பில் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மாடர்ன் கம்ப்யூட்டர் நிறுவனம் தங்களிடம் இருந்து லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் வாங்கிய வகையில் ரூ.6.75 கோடி பாக்கி உள்ளதாகவும், அதனை தராமல் ஏமாற்றுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.

அதன் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடர்ன் கம்ப்யூட்டர் நிறுவன உரிமையாளர் கோபிநாத், பங்குதாரர் ரகுநாத் மற்றும் மேலாளர் கோதைராஜ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply