தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து யுவராஜ் சஸ்பெண்டு!

tn.c.youthதமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி வகித்து வருபவர் யுவராஜ். ஈரோட்டை சேர்ந்த இவர் திடீரென இன்று அப்பதவியிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். கட்சிப் பணிகளை சரிவர ஆற்றவில்லை என்ற காரணத்தால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இளைஞர் காங்கிரஸ் பதவி வகித்து வரும் யுவராஜ் திடீரென சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் பிரமுகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சஸ்பெண்டு செய்யப்பட்ட யுவராஜ் கடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply