வைகோ – ஜெயலலிதா திடீர் சந்திப்பு!

jaya-vajகாஞ்சிபுரம் மாவட்டத்தில் வைகோ நடைபயணம் மேற்கொண்ட போது, முதல்வர் ஜெயலலிதா, வைகோவை திடீரென சந்தித்து பேசினார்.

பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்தக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி 18.02.2013 திங்கள்கிழமை கேளம்பாக்கத்தில் இருந்து வைகோ தனது நடைபயணத்தைத் தொடங்கினார். மாலையில் திருப்போரூரில் நடைபயணம் நிறைவடைந்தது.

jaya-vaiதொடர்ந்து 2-வது நாளாக 19.02.2013 திருப்போரூரில் இருந்து தனது நடைபயணத்தை அவர் தொடங்கினார். மாமல்லபுரத்தை அடுத்த பையனூர் அருகே வைகோ நடைபயணம் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, காரை நிறுத்தி காரில் இருந்து இறங்கினார். பின்னர் அவர் வைகோவை சந்தித்து பேசினார். இருவரும்  சில நிமிடங்கள் பேசினர். அப்போது வைகோவிற்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார். பின்னர் முதல்வர் ஜெயலலிதா சிறுதாவூரர் பங்களாவிற்குச் சென்றார்.

Leave a Reply