ஒரு மாநில முதல்வருக்கு மாநிலத்தைப் பற்றிய கருத்துகளைத் தெரிவிப்பதற்கு 10 நிமிட நேரம் போதுமானதாக இருக்காது! –பத்திரிகை கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்சு பேச்சு

Press Council President           மதுரையில் பத்திரிகை கவுன்சில் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு இன்று (28.12.2012) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.          ஒரு மாநில முதல்வருக்கு மாநிலத்தைப் பற்றிய கருத்துகளைத் தெரிவிப்பதற்கு 10 நிமிட நேரம் போதுமானதாக இருக்காது. கூட்டாட்சித் தத்துவத்தின் படி செயல்படுகின்ற ஒரு ஜனநாயக நாட்டில், மாநிலத்தின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது அவசியம்.          எனவே, இனிவரும் காலங்களிலாவது குறைந்தபட்சம், 15 நிமிட நேரம் கொடுத்து பேசச் செய்ய வேண்டும். மேலும், முதல்வர்கள் தெரிவிக்கும் கருத்துகள் நீண்ட நேரம் ஆகும் சூழ்நிலையில், அவர்கள் தங்கள் கருத்துகளை எழுத்துப் பூர்வமாக தெரிவிக்குமாறும், அவற்றின் முக்கிய அம்சங்களை மட்டும் சுருக்கமாக முன்கூட்டியே தெரிவிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்.

-ஆ.வேல்முருகன்

Leave a Reply