மோட்டார் சட்ட திருத்தத்தை கை விட வலியுறுத்தி, சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

CITU-PHOTO

மத்திய அரசு மோட்டார் சட்ட திருத்தத்தை கை விட வேண்டும். கேரள அரசு போல் அனைத்து மருத்துவ மனைகளிலும் 48 மணி நேர விபத்து முதலுதவி சிகிச்சையை இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட  சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் வீரமுத்து தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ. தலைவர் எஸ்.ரெங்கராஜன், செயலாளர் ஆர்.சம்பத், ஜி.சந்திரன், எஸ்.செல்வம், செந்தில்குமார், கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இறுதியில் சுரேஷ் நன்றி கூறினார்.

-எஸ்.ஆனந்தன்.

 

 

Leave a Reply