மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் மேல்பென்னாத்தூர் நடுநிலைப் பள்ளி மாணவன் சாதனை!

IMAGEதிருவண்ணாமலை கல்வி மாவட்டம், உலக திறனாளர்கள் கண்டறியும் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் 100 மீட்டர்,  200 மீட்டர்,  400 மீட்டர், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடந்தது.

திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தை சேர்ந்த செங்கம் வேட்டவலம், தண்டராம்பட்டு, கொளக்குடி போன்ற அரசு உயர் நிலை மேல்நிலைப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

செங்கம் ஒன்றியம், மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த ஆண்கள் பிரிவில் பள்ளி மாணவன் க.பவுன்குமார் 100 மீட்டர், 200 மீட்டர் ஆகிய இருப்போட்டிகளில் முதலிடம் வென்றார்.

பின்னர் நடந்த விழாவில் திருவண்ணாமலை மாவட்ட வினையாட்டு அலுவலர் ஜெ.பியூலா ஜான் சுசிலா மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனியன், 100 மீட்டர், 200 மீட்டர் ஆகிய இருப்போட்டிகளில் முதலிடம் வென்ற மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவன் க.பவுன்குமாருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவன் க.பவுன்குமாருக்கு, பள்ளியின் சார்பாக தலைமை ஆசிரியர் இரா.ஜெயந்தி பாரட்டுக்கள் தெரிவித்தார். உடன் உடற்கல்வி ஆசிரியர் சரவணக்குமார் மற்றும் ஆசிரியர்கள் ச.வேல்முருகன், த.சங்கீதா, கு.தனலெட்சுமி, ச.நாரயணன், ஜோதி அமலி, ஜெரினா ரேகா, மகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

-செங்கம் மா.சரவணக்குமார்.