திருச்சி ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு அமோகமாக நடைபெற்றது!



திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பாலகுறிச்சி அடுத்த ஆவாரங்காட்டில் இன்று  (16.01.2018) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. விழாவில் மணப்பாறை சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் கலந்து கொண்டார். இவ்விழாவில் மொத்தம் 900 பேர் கலந்துக்கொண்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சில்வர் பாத்திரம், நாற்காலி, கட்டில், வெள்ளி நாணயம் மற்றும் ரொக்கப் பரிசாக பணமும் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் வேடிக்கை பார்த்தவர்கள் உட்பட 65 பேர் காயமுற்றனர்.

  -மு.துளசிமணி.

Leave a Reply