திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இன்று (22.08.2017) காலை 10.00 மணி முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள சங்கம் சார்பில்,
(1) புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை கலைத்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும்.
(2) தொகுப்பு ஊதியம் மற்றும் மதிப்பு ஊதியம் பெறும் ஆசிரியர்களுக்கு காலம்பர ஊதியம் கொண்டு வரவேண்டும்.
(3) எட்டாவது ஊதிய கமிஷன் அமுல்படுத்தும் வரையில் 20% இடைக்கால நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என, மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
இதேக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
–மு.ராமராஜ்.