அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!- தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியதுதமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் .பன்னீர் செல்வம் ஆகியோர் அலங்காநல்லூர் வருகை தந்து ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

கோயில் காளைகள் முதலில் அவிழ்த்துவிட்ட பிறகு மற்ற காளைகளை  அவிழ்த்துவிட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் மிக சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக முதலமைச்சர் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளதுஇதேபோன்று மிக சிறந்த காளையின் உரிமையாளருக்கு, துணை முதலமைச்சர் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது. 

-சி.வேல்முருகன்.
-எஸ்.திவ்யா.

Leave a Reply